search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின் பயனீட்டாளர்கள்"

    • மின் பயனீட்டாளர்கள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.
    • மின்சாரம் சார்ந்த குறைகளை மேற்பார்வை பொறியாளரிடம் தெரிவித்து நிவர்த்தி பெறலாம்.

    ஈரோடு:

    ஈரோடு ஈ.வி.என். சாலையில் உள்ள ஈரோடு நகரியம் மின் கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் நாளை (புதன்கிழமை) மின் பயனீட்டாளர்கள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.

    கூட்டம் ஈரோடு மின் பகிர்மான வட்டத்தின் மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெற உள்ளது.

    எனவே இந்த கூட்டத்தில் ஈரோடு நகர் முழுவதும் சேர்ந்த மற்றும் கருங்கல்பாளையம், மரப்பாலம், சூரம்பட்டி, ரங்கம்பாளையம், வீரப்பன்சத்திரம்,

    சம்பத் நகர், திண்டல், அக்ரஹாரம், மேட்டுக்கடை, சித்தோடு, கவுந்தப்பாடி ஆகிய பகுதிகளை சேர்ந்த மின் பயனீட்டாளர்கள் பங்கேற்று மின்சாரம் சார்ந்த குறைகளை மேற்பார்வை பொறியாளரிடம் தெரிவித்து நிவர்த்தி பெறலாம் என மின் வாரிய செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    காங்கயம் கோட்டத்தில் மாதாந்திர மின் பயனீட்டாளர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஒவ்வொரு மாதமும் புதன்கிழமை நடைபெறும்.
    காங்கயம்:

    காங்கயத்தில் மின் பயனீட்டாளர்கள்  குறைதீர்க்கும் கூட்டம் நாளை 3-ந்தேதி நடைபெற உள்ளதாக காங்கயம் மின் வாரிய செயற்பொறியாளர் வெ.கணேஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காங்கயம் கோட்டத்தில் மாதாந்திர மின் பயனீட்டாளர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஒவ்வொரு மாதமும் புதன்கிழமை நடைபெறும்.

    அதன்படி இந்த மாதத்துக்கான குறைதீர்க்கும் கூட்டம் சென்னிமலை சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெற உள்ளது. எனவே மின் பயனீட்டாளர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களின் குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ×